*திருச்சி திருவெறும்பூர் மாநகராட்சி 40 வது வார்டு பர்மா காலனி பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் பரிதவிக்கும் பொதுமக்கள் - தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யா மொழி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை*

Jan 18, 2026 - 22:34
Jan 19, 2026 - 09:26
 40
*திருச்சி திருவெறும்பூர் மாநகராட்சி 40 வது வார்டு பர்மா காலனி பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் பரிதவிக்கும் பொதுமக்கள் - தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யா மொழி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை*

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மாநகராட்சி 40 வது வார்டு பர்மா காலனி பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் பரிதவிக்கும் பொதுமக்கள் - தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஷ்  பொய்யா மொழி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மாநகராட்சி 40 வது வார்டு பர்மா காலனி பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகளான சாக்கடை வசதி, குடிநீர் வசதி கழிப்பிட வசதி ஆகிய எதுவுமே இல்லை எனவும் மேலும் இந்த பகுதியில் தெரு விளக்குகளும் எரியவில்லை எனவும் இங்கு உள்ள மின்கம்பங்கள் அனைத்தும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத நல்லா பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் கழிப்பிட வசதி இல்லாததால் பொதுமக்கள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு மிகுந்த சிரமமாக இருப்பதாகவும் மேலும் சாக்கடை வசதி இல்லாததால்

மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி வீட்டிற்குள் வருவதாகவும் இதனால் டெங்கு, மலேரியா போன்ற கெ கொடிய வைரஸ் நோய்கள் வருவதாகவும் இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு உடனடியாக இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0