*திருச்சி BHEL தொழிற்சாலையில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்-திருவெறும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் வாக்குறுதி*

Apr 3, 2026 - 21:20
 4
*திருச்சி BHEL தொழிற்சாலையில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்-திருவெறும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் வாக்குறுதி*

திருச்சி BHEL தொழிற்சாலையில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் - திருவெறும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் வாக்குறுதி 

திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட BHEL தொழிலிற்சாலை தொடங்குவதற்கு முன்பு தமிழர்களுக்கே வேலை முன்னுரிமை வழங்கப்படும் என்று நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது தற்போது அதில் வடமாநிலதவர்களுக்கே அதிக முன்னுரிமை தரப்படுகிறது மற்றும் பெருமளவில் வடமாநிலதவர்களே நிரந்தர பணியாளர்களாக பணிபுரிகிறார்கள்.

 தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதில் வேலை அளிக்கப்படுவதில்லை என்றும் , மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே பணிபுரிகிறார்கள் .இதன் காரணமாக தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலை பறிக்கப்படுகிறது அதனால் தங்களின் குடும்ப நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருவெறும்பூர் களத்தில் வேட்பாளராக நிற்கும் அண்ணன் ஜல்லிக்கட்டு ராஜேஷ் அவர்களிடம் அங்குள்ள தொழிலாளர்கள் கோரிக்கைகளை வைத்தனர்.

 BHEL தொழிற்சாலையில் தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகமாக பணிசெய்ய வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அதனை தொடர்ந்து அதில் ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்யும் தமிழர்கள் அனைவரையும் நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் ஜல்லிக்கட்டு ராஜேஷ் அவர்கள் தொழிலாளர்களை நேரில் சந்தித்து இதை அனைத்தையும் நான் ஆட்சிக்கு வந்தால் சரி செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0