*திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் அடையாளம் தெரியாத நபர் உடல் நசுங்கிய நிலையில் சடலமாக மீட்பு- கொலையா? விபத்தா? போலீசார் விசாரணை*

Jul 7, 2026 - 16:47
 218
*திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் அடையாளம் தெரியாத நபர் உடல் நசுங்கிய நிலையில்  சடலமாக மீட்பு- கொலையா? விபத்தா? போலீசார் விசாரணை*

அரியமங்கலம் குப்பை கிடங்கில் அடையாளம் தெரியாத நபர் உடல் நசுங்கிய நிலையில் சடலமாக மீட்பு- கொலையா? விபத்தா? போலீசார் விசாரணை

திருச்சி அரியமங்கலம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு மறு சுழற்சி செய்யப்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்கினையொட்டி மனமகிழ் மன்றம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த மன மகிழ் மன்றத்தில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட நபர்கள் மது அருந்த வந்து செல்வதுண்டு. இந்த நிலையில், அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் நேற்று இரவு அரியமங்கலம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அரியமங்கலம் மணமகிழ் மன்றத்தில் மது அருந்திய நபர் தவறுதலாக குப்பை கிடங்கின் குப்பை மறுசுழற்சி செய்யும் பகுதியில் விழுந்தது தெரியாமல் அப்பகுதியில் இயங்கிய செயின் பொக்லைன் வாகனத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம், அதே நேரம் மர்ம நபர்கள் யாரேனும் சம்பந்தப்பட்ட நபரை கொலை செய்து இந்த குப்பை கிடங்கில் போட்டது தெரியாமல் செயின் பொக்லைன் அவர் மீது ஏறி இருக்கலாம் என்ற கோணத்திலும் அரியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பை கிடங்கில் கைப்பற்றப்பட்ட உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்தவர் யார் என்பது குறித்துப் அரியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0