*திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் - மாநகராட்சி மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு*

Mar 20, 2026 - 11:42
 21
*திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் - மாநகராட்சி மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு*

திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

திருச்சி மாநகராட்சி 48வது வார்டு பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம் அருகே பொன்மலை வ.உ.சி திடலில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தப் பகுதியில் வட மாநில ரயில்வே ஊழியர்கள் அதிகம் வசிப்பதாகவும் அவர்கள்தான் இந்த குப்பைகளை வ.உ.சி திடல் பகுதியில் அதிகமாக கொட்டுவதாகவும் இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டுகின்றனர். எனவே உடனடியாக இது குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0