திருச்சி திருவெறும்பூர் அருகே தேவராயனேரி பகுதியில் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்றி புதிய குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

Dec 5, 2025 - 10:58
 45
திருச்சி திருவெறும்பூர் அருகே  தேவராயனேரி பகுதியில் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்றி புதிய குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி திருவெறும்பூர் அருகே தேவராயனேரி பகுதியில் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்றி புதிய குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டுமென  பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே திரு நெடுங்குளம் பஞ்சாயத்து தேவராயனேரி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நீண்ட நாட்களாகவே அந்த பகுதியில் குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு சின்டெடெக்ஸ் குடிநீர் தொட்டியும் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அந்த குடிநீர் தொட்டிக்கு அருகில் செல்வதற்கே அச்சப்படுகின்றனர்.

 இது குறித்து பலமுறை பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். உடனடியாக அந்த குடிநீர் தொட்டியை அகற்றி புதிய குடிநீர் கட்டி தர வேண்டுமென அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0