*திருச்சியில் பதுங்கி இருந்த திருடனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது*

Dec 12, 2025 - 19:50
Dec 12, 2025 - 19:54
 473
*திருச்சியில் பதுங்கி இருந்த திருடனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது*

திருச்சியில் பதுங்கி இருந்த திருடனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் மீது கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் கோவை மாநகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் ராஜசேகர் தேடப்பட்டு வந்தார். ராஜசேகர் திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீனிவாசன் நகரில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ராஜசேகர் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீனிவாசன் நகரில் பதுங்கி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற கோவை மாநகர தனிப்படை உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் நான்கு போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் முதுநிலைக் காவலர் கண்ணன் ஆகியோரை ராஜசேகர் கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் பாஸ்கர் ராஜசேகரை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இதில் காயம் அடைந்த ராஜசேகர் திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெட்டு காயம் அடைந்த காவலர்கள் பாஸ்கர் மற்றும் கண்ணன் ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0