இன்று வானில் தோன்றும் அதிசய சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பொதுமக்கள் காணலாம் சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கு திருச்சி கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு 

Sep 7, 2025 - 11:16
Sep 7, 2025 - 11:22
 11
இன்று வானில் தோன்றும் அதிசய சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பொதுமக்கள் காணலாம் சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கு திருச்சி கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு 

இன்று வானில் தோன்றும் அதிசய சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பொதுமக்கள் காணலாம் சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கு திருச்சி கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு

இந்த ஆண்​டின் முழு சந்​திர கிரகணம் இன்று செப்​.7ம் தேதி நடை​பெற உள்​ளது. இதை வெறும்கண்​களால் காண முடி​யும். சூரியன், நில​வு, பூமி மூன்​றும் ஒரே நேர் கோட்​டில் வரும்​போது கிரகணங்​கள் நிகழ்​கின்​றன. அப்​போது நில​வின் நிழல் சூரியனை மறைத்​தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமி​யின் நிழல் சந்​திரனை மறைத்​தால் அது சந்​திர கிரகணம் எனவும் அழைக்​கப்​படு​கிறது. இந்​தாண்​டின் முதல் சந்​திர கிரகணம் கடந்த மார்ச் மாதம் தென்​பட்​டது. அதைத்​தொடர்ந்து முழு சந்​திர கிரகணம் இன்று (செப்​.7) நிகழ்​கிறது. இந்​திய நேரப்​படி இரவு 9.57 முதல் 1.27 மணி வரை மிக நீண்ட சந்​திர கிரகண​மாக அமை​யும். இதில் முழு சந்​திர கிரகணம் 11.42 முதல் 12.33 மணி வரை தென்​படும். அப்​போது சந்​திரன் அடர்​சிவப்பு நிறத்​தில்மிளிரும். இது ரத்த நிலா (பிளட் மூன்) என்று அழைக்​கப்​படு​கிறது. இந்​நிகழ்வை ஐரோப்​பா, ஆசி​யா, ஆஸ்​திரேலி​யா, ஆப்பி​ரிக்கா, தென் அமெரிக்காவின்கிழக்​கு பகு​தி, பசிபிக், அட்​லாண்​டிக், இந்​திய பெருங்​கடல், ஆர்க்​டிக், அண்​டார்​டிகா ஆகிய பகு​தி​களில் தெரி​யும். குறிப்​பாக இந்​தி​யா​வில் சென்​னை, பெங்​களூரு உட்பட பல்​வேறு இடங்​களில் தெளி​வாக பார்க்க முடி​யும். இந்த முழு கிரகணத்தை வானம் தெளி​வாக இருந்​தால் வெறும் கண்​களாலேயே கண்டு ரசிக்​கலாம். இதற்​கிடையே, இந்​நிகழ்வை தொலைநோக்கி வழி​யாக பொது​மக்​கள் பார்​வை​யிட திருச்சி கோளரங்கம், சென்னை கோட்​டூர்​புரத்​தில் உள்ள பிர்லா கோளரங்​கில் சிறப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. இரவு 9 மணி முதல் கிரகணம் விடும் வரை பார்​வை​யாளர்​கள் அனு​ம​திக்​கப்​படு​வர். இத்​தகைய அரிய வானியல் நிகழ்வு இனிமேல் 2028 டிசம்​பர் 31-ல் தான் நடை​பெறும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. கிரகணத்தின் போது செய்யக்கூடாதவைகளாக பெரியோர்களால் பார்க்கப்படுவது.... கிரகணத்தின் போது உணவு அல்லது தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது ஒரு முக்கிய ஐதீகமாகும். இந்த நேரத்தில், பூமியின் மீது விழும் கிரகணத்தின் கதிர்வீச்சு, உணவை எளிதில் நஞ்சாக்கி, அதன் இயல்பு தன்மையை மாற்றிவிடும் என்று நம்பப்படுகிறது. கிரகணம் தொடங்குவதற்கு முன்பு, சமைத்த உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றில் துளசி இலைகள் அல்லது அருகம்புல் போட்டு வைப்பது ஒரு முக்கியமான சடங்காக பின்பற்றப்படுகிறது. கிரகணம் முடிந்தவுடன், குளிப்பது மிகவும் அவசியமாகும். இது, கிரகணத்தின் தாக்கத்திலிருந்து உடலையும், மனதையும் தூய்மைப்படுத்த உதவும் என்று கருதப்படுகிறது. இந்த மரபுகள், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் கலாச்சார மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0