*திருச்சி காட்டூர் பிலோமினாள்புரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ள தனது வார்டை சேர்ந்த நபருக்கு இரத்தத்தை தானமாக கொடுத்து உதவிக்கரம் நீட்டிய 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்*

May 8, 2026 - 19:55
 29
*திருச்சி காட்டூர் பிலோமினாள்புரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ள தனது வார்டை சேர்ந்த நபருக்கு இரத்தத்தை தானமாக கொடுத்து உதவிக்கரம் நீட்டிய 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்*

திருச்சி காட்டூர் பிலோமினாள்புரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ள தனது வார்டை சேர்ந்த நபருக்கு இரத்தத்தை தானமாக கொடுத்து உதவிக்கரம் நீட்டிய 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 43 வது வார்டு காட்டூர் பிலோமினாள் புரம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் இவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜிவிஎன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு 0-நெகட்டிவ் வகை இரத்தம் அவசரமாக தேவைப்பட்ட காரணத்தினால் உடனடியாக 43 வது வார்டை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் ரத்தத்தை தானமாக வழங்கினார். இதற்காக அவர்களது குடும்பம் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தனர். மேலும் இந்த செய்தியை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மாமன்ற உறுப்பினர் செந்திலுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0