*திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதவத்தூர் – சத்திரப்பட்டி பகுதியில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட அறியாறு பெரிய குளத்தில் , அரசு அனுமதி இன்றி மண் அள்ளப்படுவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது*

Jan 30, 2026 - 08:41
 15
*திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதவத்தூர் – சத்திரப்பட்டி பகுதியில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட அறியாறு பெரிய குளத்தில் , அரசு அனுமதி இன்றி மண் அள்ளப்படுவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது*

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதவத்தூர் – சத்திரப்பட்டி பகுதியில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட அறியாறு பெரிய குளத்தில் , அரசு அனுமதி இன்றி மண் அள்ளப்படுவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி அதிக அளவில் மண் அள்ளப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கான எந்த அரசு அனுமதியும் பெறப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. பொதுப்பணித்துறை (PWD) கட்டுப்பாட்டில் உள்ள அறியாறு பெரிய குளத்தில் , இவ்வாறு பகல்நேரத்திலேயே மணல் அள்ளப்படுவது எவ்வாறு சாத்தியமாகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அள்ளப்படும் மண் எங்கு கொண்டு செல்லப்படுகிறது, யாருக்காக இந்த நடவடிக்கை நடைபெறுகிறது என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து மண் அள்ளும் பணியில் ஈடுபட்ட நபர்களிடம் கேட்டபோது, அவர்கள் எந்தவித பதிலும் அளிக்காமல் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சட்டவிரோத மண் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0