திருச்சியில் பெய்த கன மழையால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து 11 வயது மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Sep 7, 2025 - 15:00
 226
திருச்சியில் பெய்த கன மழையால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து 11 வயது மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
பலியான மாணவியின் வீடு

திருச்சியில் பெய்த கன மழையால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து 11 வயது மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

திருச்சியில் நேற்று இரவு பெய்த கன மழையினால் இன்று காலை 11 மணியளவில், திருச்சி இ.பி.ரோடு அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரில் மண்சுவரால் ஆன ஒரு வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததால் கார்த்திகா வயது (11) என்ற மாணவி இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார் உடனடியாக அந்த மாணவியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதில் கொளஞ்சி (42) என்பவர் தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ளார். 11 வயது மாணவி இறப்பால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 2
Wow Wow 0